அரசு செவிலியர்கள் சென்னை, நெல்லை ,தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் கருப்புபேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், மத்திய அரசு செவிலியர்கள் இணையான ஊதியம் வழங்கவும், தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.