தமிழகம் முழுவதும், தொமுச – சிஐடியூ உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்கல் உள்ளிட்டவற்றை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொ.மு.ச., சிஐடிய. உள்ளிட்ட 9 போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடபட்டுள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் பஸ் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்தபோதும், அறிவித்தபடி இன்று காலை வேலைநிறுத்தம் தொடங்கியது. அதிமுக-வின் தொழிலாளர் சங்கத்தினர் மட்டும் இதில் பங்கேற்கவில்லை.
வேலை நிறுத்தம் காரணமாக, சென்னையில் குறைவான பேருந்துக்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் பேருந்துக்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டன. திருப்பூரில் 15 சதவீத பஸ் மட்டும் இயக்கப்பட்டன. இதேபோல் மதுரை, கோவை, மயிலாடுதுறை, கடலூர், ஈரோடு, உளுந்தூர்பேட்டை, நெல்லையில் பேருந்துக்கள் குறைவாகவே இயக்கப்பட்டன. இதனால், பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.